Follow me on Twitter

Tuesday, October 20, 2015

Tarun Vijay's first Tamil column begins on TOI's Samayam.com

வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும்




நாடாளுமன்றத்தில் நான் பேசுகையில், திருவள்ளுவர் தினத்தை ‘இந்திய மொழிகள்’ நாளாக கொண்டாட வேண்டும் என்று கூறியதை கட்சி வேறுபாடின்றி அனைவரும் வரவேற்றனர். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு. அனைத்து இந்திய மொழிகளுக்கும் மரியாதை அளிக்கும் வகையில் வட மாநிலங்களிலும் திருக்குறளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தியதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் வடஇந்தியப் பள்ளிகளில் தமிழை விருப்பப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும்.
திருவள்ளுவர் மற்றும் சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கை குறிப்புகளை பாடமாக சேர்க்க மற்றும் அவர்களது பிறந்த நாளை வட இந்தியப் பள்ளிகளில் கொண்டாடவும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஈரானி ஒப்புக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் பல்கலைக் கழக மானியக் குழு  இவர்கள் தொடர்பான கட்டுரைப் போட்டிகளை நடத்தி இருந்தது.
பழமையான தமிழ் மொழியை வணங்கி எனது முதல் கட்டுரையை முடிக்கிறேன்.
எழுதியவர் – தருண் விஜய் (பாஜக எம்.பி.,)
(உத்தரகண்ட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் தருண் விஜய். தமிழுக்கு இவர் ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி இவருக்கு கடந்தாண்டு மலேசிய தமிழ் இலக்கிய அமைப்பு விருது வழங்கியதை அடுத்து, ”திருக்குறளின் தூதர்’ என்று இவர் அழைக்கப்படுகிறார்.
இந்திய, சீன நண்பர்கள் அமைப்பின் தலைவராகவும், ராணுவத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கமிட்டியின் உறுப்பினராகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திருவள்ளுவர் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.)
தமிழில்: தனலட்சுமி.G.
மறுப்பு : மேலே கூறிய கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்து

1 comment:

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT TO KNOW THIS! THANKS FROM WORLD TAMILS! GREETINGS FROM NORWAY!